மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!
பொருள்:
எழுப்புபவர்:
இறைவன் எல்லையற்ற அருள்மலை; அந்த மலை திருமாலால் அறிய முடியாதது; நான்முகனால் காண இயலாதது. அந்த மலையை நாம் அறிந்துவிட முடியும் என்பதுபோல் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வாசல் கதவைத் திற! இறைவன் மண்ணுலகினராலும், விண்ணுலகினராலும், பிற உலகினராலும் காணுதற்கு அருமையானவன், அவனுடைய திருக்கோலத்தையும், எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டு அருளிச் சீராட்டுகின்ற, பெருங்குணத்தையும் பாடுகின்றோம்; "சிவனே! சிவனே!" என்று உரக்கப் பாடுகின்றோம். இந்த ஒலி கேட்கும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மை போலும்!
எழுப்புபவர்:
இறைவன் எல்லையற்ற அருள்மலை; அந்த மலை திருமாலால் அறிய முடியாதது; நான்முகனால் காண இயலாதது. அந்த மலையை நாம் அறிந்துவிட முடியும் என்பதுபோல் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யை, பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வாசல் கதவைத் திற! இறைவன் மண்ணுலகினராலும், விண்ணுலகினராலும், பிற உலகினராலும் காணுதற்கு அருமையானவன், அவனுடைய திருக்கோலத்தையும், எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டு அருளிச் சீராட்டுகின்ற, பெருங்குணத்தையும் பாடுகின்றோம்; "சிவனே! சிவனே!" என்று உரக்கப் பாடுகின்றோம். இந்த ஒலி கேட்கும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மை போலும்!
No comments:
Post a Comment